3/4/15

சிலுவைப்பாதை 5ம் ஸ்தலம்: இயேசுவிற்கு சீமோன் தோள் கொடுத்தல்:

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசுவிற்கு சீமோன் தோள் கொடுத்தல்:

way of the cross - station 5 - United Tamil Catholics


பாரமுள்ள சிலுவைகள் நடுவிலும்/,நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் உணடு என்பதும் உயர்ந்த உதாரணம்/ சீமோன்/. தோழமை/ தோள் கொடுப்பதிலே தொடங்க வேண்டும்/. வாய்மொழியோடு நின்றுவிட்டால்/, வகையற்று போய்விடும்/. பளபளக்கிற பாதரசச் சொற்கள்/ சராசரிகளுக்கு உண்ணுகிற/ பருக்கைகள் ஆவதில்லை/. ஊருக்கெல்லாம் அறிவித்துவிட்டு செய்கிற விளம்பர உதவிகளைவிட/, ஆபத்தில் உதவுவது/ சிறப்பானது/. தாய்ப்பாலே விளையாகிப்போன உலகில்/, வசதி இருக்கிறபோது மொய்ப்பதும்/, வறுமையாகிரபோது ஓடுவதும்/ உறவின் இலக்கணம் என்றாகிவிட்டது/. காசு வாங்காமலே வீசுகிற காற்றைப்போல/, பலனைப் பாராமல் பணியை செய்தால்/, சீமோனைப் போல/ சிறக்கலாமே. .

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

சோகம் வந்து துள்ளி எழ, குருதி வெள்ளம் கோலமிட
துடைத்தார் ரொனிக்கம் அவர் மனித மாணிக்கம்.

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 

http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

3/3/15

நான்காம் தலம்

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசு தன் அன்னையை சந்தித்தல்:

way of the cross - station 4 - United Tamil Catholics


வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லுகிற அகராதி/ "அம்மா"/. அம்மாவின் ஆசி மட்டும் ஒருவருக்கு கிடைத்துவிட்டால்/, உலக உருண்டையே அவர் உள்ளங்கைகளில்/ உருளுகிற/ கோளிகுண்டுதான்/. அன்னை/ மாற்று குறையாத தங்கம்/. அவளுக்கு மாற்றாக/ உலகில் ஏதும் இல்லை/, அவள் ஊட்டுகின்ற பாலில்/ வீரம் கரைந்து இருக்கும்/. தியாகம் நிறைந்து இருக்கும்/. பாசம் உறைந்து இருக்கும்/. அன்னை மரியாள்/ இயேசுவிற்குக் கிடைத்த/ அற்புத புதையல்/. தம் திட்டத்தை செயல்படுத்த/ இறைவனே தேடி எடுத்த/ மாணிக்கப் பெட்டகம் அல்லவா?/ தன் உள்ளத்தை வாள் ஊடுருவினாலும்/, உலகத்தை விடுதலை ஊடுருவ வேண்டும் என்ற கனவு வரிகளை/ விழிகளில் எழுதி/ கல்வாரிக்கு/ மகனை அனுப்பி வைக்கிறாள்/. இனி/ எல்லாத் தலைமுறையும்/ இவளை பேருடையாள்/ என்றுதானேப் போற்றும் 

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

தோழமைதான் வாழ்கையே, தோள்க் கொடுத்தால் பிறக்கும் வழி
சீமோன் வடிவிலே, உதவி உதயமானதே

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ? 


http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

3/2/15

சிலுவைப்பாதை 3ம் ஸ்தலம்

சிலுவைப்பாதை 3ம்  ஸ்தலம்

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்:

way of the cross - station 3 - United Tamil Catholics


வாழ்க்கை என்பது/ ஒரு தடகள ஓட்டம்/. இந்த ஓட்டத்தில் வென்றிட/, விழுவதுகூட/ வெற்றி முயற்சிதான்/. விழுவதால்தான் வீரனுக்கே விலாசம் கிடைக்கிறது. தாயகம் காக்கக்/ காயபடுவதும் வீரம்தான்/. இலட்சிய வீரன் இடறி விழுகிறபோது/, இலட்சியம் எழுந்து நிற்கிறது/. இலட்சியம் விழுந்து விட்டால்/, வரலாறே வடுபட்டுவிடும்/. இயேசு விழுந்தாலும்/, இயேசுவின் இலடச்சியங்களுக்கு/ எந்த சேதாரமும் இல்லை/. அழகையின் ஆசை வார்த்தைகள்/, அப்பம் உண்டவர்களின்/ அலங்காரக் கோரிக்கைகள்/, சீடர்களின் சிங்கார கனவுகள்/. இவைகளால்/ இயேசு தடுமாறியதே இல்லை/. சலனங்களை சமாளித்துவிட்டால்/, வானமே வசப்படும்/. வேங்கையோடு மோத வேண்டிய நீ/, ஆந்தையின் அலறலைக் கண்டு/ அரண்டுவிடலாமா?

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

அன்னைமரி விடை கொடுக்க, கண்ணீர் துளி இடைமறிக்க
உறவு தடுத்தது, அங்கே கடமை ஜெயித்தது.

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா 


http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

சிலுவைப்பாதை 2ம் ஸ்தலம்: இயேசுவின் தோளில் சிலுவை

சிலுவைப்பாதை 2ம்  ஸ்தலம்

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசுவின் தோளில் சிலுவை:

way of the cross - station 2 - United Tamil Catholics


குற்றவாளி சிலுவை சுமப்பதுண்டு/. சிலுவையை சுமப்பதினால்/ ஒருவர் குற்றவாளி ஆகிவிடமுடியாது/. இலட்சிய போராளிகளுக்கு/ சிறைக்கூடம் கூட/ பள்ளிகூடம்தான்/. தியாகிகளை அடைக்காத்ததால்தான்/, சிறைச்சாலைகளுக்கேச் சிறப்பு கிடைத்தது/. இயேசு சுமந்ததால்தான்/, சிலுவைக்கே சிறப்பு வந்தது/. சிலுவை/, இது இரண்டு மரத்துண்டுகளின் இணைப்பு அல்ல/. விண்ணையும், மண்ணையும்/ இணைக்க வந்த உறவுக்கோடு/. இயேசுவின் சிலுவை/ உலகிற்கு மீட்பானது/. இன்றைக்கு எத்தனை எத்தனை சிலுவைகள்/, அடக்குமுறைகள்/, அடிமைத்தனங்கள்/, சுரண்டல்கள்/, சாதி மத மோதல்கள்/, வறுமை/, பட்டினிகள்/. உலகில் தோளில் உட்கார்ந்திருக்கிற இந்த சிலுவைகளை இறக்கி வைத்திட/, மனிதர்களே எழுந்து வாருங்கள்.

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

மரச்சிலுவை உடலழுத்த, மனச்சிலுவை நெஞ்சழுத்த
தரையில் விழுகிறார், தனியே தனக்குள் அழுகிறார்.

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 

http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

சிலுவைப்பாதை முதலாம் ஸ்தலம்


சிலுவைப்பாதை முதலாம் ஸ்தலம்
https://www.youtube.com/watch?v=kgHv_W2DLrI

கல்வாரிக் குன்றில் காணிக்கையானவா 
சிலுவை மரத்தில் வாழ்வு சொன்னவா 
என் இதய அதிர்வுகள் 
அது உனது பாதப் பதிவுகள் 
உனது பாதப் பதிவுகள் 

கழுமரம் எங்காவது பூப்பூக்குமா?/ பூத்தது/, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்/ கல்வாரிக் குன்றிலே/ கழுமரத்திலே/ வானகதிற்கும் வையகத்திற்கும் நடுவே/ ஒரு மனிதப் பூ/ மலர்ந்தது/. குருதியில் குளித்த அந்த பூதான்/ இயேசு பெருமான்/. அக்கிரமக்காரர்களின்/ அநியாயக்காரர்களின்/ கதைகளை முடிப்பதற்காக/ நிமிர்ந்த சிலுவை/ அன்று ஒரு அவமானச் சின்னம்/ இயேசு பெருமான் அந்த சிலுவையை சுமந்ததால்/ அதில் மரணத்தைத் தழுவியதால்/ ஒரு அவமானச் சின்னம்/ ஆராதனைக்குறியச் சின்னமாக ஆனது/. சண்டாளர்களும் பழித்த/ ஒரு சிலுவையின் முன்னால்/ சக்கரவர்த்திகளும் மண்டியிட்டார்கள்/. உழுத நிலம் போல/ அந்த சிலுவையில் கிடந்த உடல்/ அதை நினைக்கிறவர்களின் உள்ளங்களை எல்லாம்/ இன்றைக்கும் உழுதுகொண்டே இருக்கிறது/. நாடு கடந்து வந்த நதியான/ இயேசு பெருமானின் பாடுகளை/ குறிப்பாக அவர் சிந்திய இரத்தத்தை/ நெஞ்சிலே வைத்து/ நினைவிலே போற்றுகிற பெருமக்கள்/ பேறுபெற்றவர்கள்/. இந்த சிலுவை பாதையில்/ கலந்துகொண்டும்/, கலந்து கொள்ள முடியாமல் போன/, இயேசுவின் பாடுகளை தியானிக்கின்ற ஒவ்வொருவரின் உடலிலும்/, உள்ளத்திலும்/ இயேசுவின் ரத்தம் கலந்து பாய்ந்து/ அனைவரது வாழ்க்கையையும்/ வரலாறு ஆக்கட்டும். இப்போது கண்முன்னே விரிகிறது கல்வாரி. 

இறைவன்/ தனது இருக்கையிலிருந்து கற்பிக்கிற வேதம்/ மனிதனின் இதயத்தில் நுழைய மறுத்தபோது/ இறைவனே இறங்கி வந்து வேதமானார்/ சிலுவை மரத்தில்/ பாடமானார்/. வருடம் தோறும் வந்து போகிற தவக்காலம்/ இயேசுவிற்காக கண்ணீர் வடிக்கின்ற/ அழுகை காலமல்ல/ வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற கருணை காலம்/ இது வருத்தம் கொள்கின்ற நாட்கள் அல்ல/ வாழ்வில்/ திருத்தம் எற்படுத்திகொள்கிற நாட்கள்/ சிலுவை பாடுகளை சிந்திக்கின்றபோது/ கல்வாரிக்குன்றில் காயப்பட்ட இயேசுவோடு/ கைக்கோர்த்துகொண்டு நடக்கிறதுபோல் இருக்கிறது/. வாருங்கள் சேர்ந்து நடப்போம். 

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய் |
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ? | - 2
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்

வறியவரின் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளில்
நீதி இல்லையே, வறியோர் ஜெயிப்பதில்லையே!
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?


நீதி மன்ற தீர்ப்பு/. இது/ வளியோருக்கு வசதியாக வளைகிற தென்னங்கீற்று/. சிபாரிசுக்கு ஆளில்லாததால்/ இயேசுவிற்கு இந்த சிலுவை தீர்ப்பு/. மேல் முறையீட்டு கதவுகளே அமைக்கப்படாத கறுப்புத் தீர்ப்பு/. நடைமுறையில்/ வறியவரின் வழக்கென்றால்/ நீதிமன்ற வாதத்திர்க்குகூட/ முடக்கு வாதம் வந்து விடுகிறது/. பொய் சாட்சி சொல்ல/ வாடகை மனிதர்கள்/ வரிசையில் நிற்கிறார்கள்/. நீதியின் கண்களை கட்டிக்கொண்டு/ விறகில் வெண்ணை தேடுகிற/ கண்துடைப்பு விசாரணைகள்/. விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பு எழுதுவது/, உலகில் வழக்கு/. ஆனால்/, இயேசுவின் வழக்கில் மட்டுமே/ தீர்ப்பு எழுதபட்டபிறகே/, விசாரணைகள் கண் விழிக்கின்றன/. அரசியல்வாதியின் தீர்ப்பு/, இலட்சியவாதியின் முன்/ முனை முறிந்து போகும். 

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்.

செம்மறிபோல் பழி சுமந்து சிலுவைமரம் தோளில் ஏற்றி
நடந்து போகிறார், உலகை நடத்த போகிறார்
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ? 


http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

சிலுவைப்பாதை

சிலுவைப்பாதை

https://www.youtube.com/watch?v=8ktDoi-RvSw

https://www.youtube.com/watch?v=DntNwL2290I

https://www.youtube.com/watch?v=-UDniSZoiRo

நித்யசஸ்துதிக்குரிய .... பிராத்தனை

நித்யசஸ்துதிக்குரிய  .... பிராத்தனை

https://www.youtube.com/watch?v=6776Lv6RnOc